முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஊட்டி செல்வது ஏன் தெரியுமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பலவிதமான அரசியல் குழப்பங்களுக்கு இடையே நாளை ஊட்டி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கோடை விடுமுறையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்க்கண்காட்சியை கண்டு மகிழ்வது வழக்கம்.
இந்த ஆண்டு 121-வது மலர் கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ம் தேதி தொடங்கி மூன்று நாள் நடைபெறவுள்ளது. இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து அவர் ஊட்டி செல்வார் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.