’துப்புரவு பணியாளர்கள்’ இனி ‘தூய்மை பணியாளர்கள்”: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி

மக்கள் நலன், பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணியாற்றிடும் துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும் அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி “தூய்மை பணியாளர்கள்” என அழைக்கப்படுவர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு துப்புரவு பணியாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி என தமிழகத்தின் தூய்மை பணியாளர்கள் தெரிவித்து வருகின்றானர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply