shadow

tamilisaதமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று சென்னையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற போது  காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார். தமிழக பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே பாஜக தமிழக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி  பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வடபழனியில் பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கிருந்த டாஸ்டாக் கடைக்கு தமிழிசை பூட்டு போட முயன்றார். அவரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜனதா கட்சியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply