shadow

அழகிரி அச்சுறுத்தல்கள் எங்களுக்கு ரொம்ப சாதாரணம்: டிகேஎஸ்.இளங்கோவன்

என்னை திமுகவில் சேர்த்து கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி விடுத்த எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ். இளங்கோவன், ‘திமுகவுக்கு ஜெயலலிதா கொடுத்த அச்சுறுத்தல்களையே நாங்கள் சமாளித்தோம். அப்படிப்பட்ட எங்களுக்கு அழகிரியின் அச்சுறுத்தல் எல்லாம் ரொம்ப சாதாரணம் என்று கூறியுள்ளார்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரி திமுக சேர விருப்பப்பட்டார். மறைமுக தூதுவும் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் மு.க.ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அழகிரியின் எண்ணம் நிறைவேறவில்லை

இந்த நிலையில் தனது பலத்தை நிரூபிக்க வரும் செப் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, ‘என்னை திமுகவில் சேர்த்து கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து கருத்து கூறிய திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ். இளங்கோவன், ‘ஜெயலலிதா பெரிய பெரிய அச்சுறுத்தல்களையெல்லாம் திமுகவுக்கு கொடுத்தார். அதையெல்லாம் சமாளித்து, எதிர்கொண்டு, போராடி நின்றது திமுக. ஜெயலலிதாவின் மிக மோசமான அச்சுறுத்தல்களையெல்லாம் பார்த்தால், அழகிரி சொல்லும் அச்சுறுத்தல்களெல்லாம் ரொம்ப சாதாரணம். இதையெல்லாம் கடந்துபோகிற சாதுர்யமும் துணிச்சலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு’ என்று கூறியுள்ளார்..

 

Leave a Reply