shadow

Pervez-Musharraf4இந்தியாவுக்கு எதிராக போராட பாகிஸ்தான் மக்களை தூண்டுவிட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நேற்று ஒரு பேட்டியில் ஆவேசமாக பேசியுள்ளார்.

தேசதுரோக வழக்கில் சிக்கி, நாடு கடத்தப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலின் போது நாடு திரும்பினார். அவர் மீது தற்போது நான்கு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சியில் நேற்று பேட்டியளித்த முஷாரப், “”காஷ்மீரில் பாகிஸ்தானுக்கும் பங்கு உண்டு. காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக போராட பாகிஸ்தான் மக்களை நாம்தான் தூண்டிவிட வேண்டும். 1999ஆம் ஆண்டு போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் போராட தயாராக இருந்திருந்தால் இந்தியா தோல்வி அடைந்திருக்கும். பாகிஸ்தானும் அன்று வெற்றியுடன் திரும்பியிருக்கும்

காஷ்மீரில் நாம் இந்தியர்களுடன் சண்டையிடுகிறோம். ராணுவம் முன் புறமும், பின்புறமும் இருக்கிறது. உள்நாட்டில் நாம் வலுவாக இருந்தால் யாருக்கும் நம்மை குறி வைக்கும் தைரியம் வராது. நாம் அனைவரும் முஸ்லீம்கள். நாம் மற்றொரு கன்னத்தை காட்ட கூடாது. நாம் மற்றவர் கன்னத்தில் அறைய வேண்டும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரானவர். அவர் இன்னும் மாறவில்லை.

அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல், நமது கண்ணியத்தை நாம் காப்பாற்றியிருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி இந்தியாவுக்கு மிக பிடித்த நாடு பாகிஸ்தான் என கூறுவது நகைச்சுவைக்குரியது” என்றார்.

Leave a Reply