TNPL கிரிக்கெட்: திருவள்ளூர் அணிக்கு 2வது வெற்றி
கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய TNPL கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எட்டு அணிகள் பங்கு பெற்றுள்ள நிலையில் நேற்று மதுரை மற்றும் திருவள்ளூர் அணீகள் மோதின. நத்தம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மதுரை அணியை திருவள்ளூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. திருவள்ளூர் அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற திருவள்ளூர் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கத்தில் விறுவிறுப்பாக ஆடினாலும் பின்னர் திருவள்ளூர் அணியின் அதிரடி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 137 ரன்கள் ம்ட்டுமே எடுத்தது.
திருவள்ளூர் அணியின் ரோஹித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.