டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கழிவறையில் பிணமாக கிடந்த திருப்பூர் மாணவர்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரத்பிரபு என்பவர் சடலமாக இருந்தது கண்டெடுக்கப்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மாணாவர் சரத்பிரபு தனக்கு தானே இன்சுலின் செலுத்திக் கொண்டதாகவும் இதனை அவரது உறவினர்களும் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது
ஆனால் இதுகுறித்து தமிழக அரசு கவனத்தில் கொண்டு மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்த மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்கள் சமூக வலைத்தள மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.