shadow

திருப்பதி மலைப்பாதையில் பயங்கர விபத்து. கார் மோதியதால் பக்தரின் கால் துண்டிப்பு

tirupatiதிருமலை திருப்பதி மலைப்பாதையில் பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தற்கெட்டு மோதிய கார் ஒன்று ஏற்படுத்திய விபத்து காரணமாக பக்தர் ஒருவரின் கால் துண்டானது. இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலையில் திருப்பதி மலைப்பாதையில் கார் ஒன்று இறங்கி வந்தது. அப்போது திடீரென காரின் பிரேக் பிடிக்காததால், கால்நடையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ஒருவருடைய கால் துண்டாகி சாலையில் இருந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 4 பக்தர்களும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காயமடைந்த பக்தர்கள் பெங்களுரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் நான்கு பக்தர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply