திருச்செந்தூர் திருக்கோவிலில் மாசி திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தங்க பல்லக்கில் 9 சந்திகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.
ஒவ்வொரு வருடமும் மாசி திருவிழாவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தரும் நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக பக்தர்கள் வருகை தந்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.