shadow

உலகப்புகழ் பெற்ற கோல்ப் வீரர் திடீர் கைது

உலக அளவில் பிரபலமான கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கோல்ப் விளையாட்டின் முடிசூடா மன்னனான திகழ்ந்த டைகர் உட்ஸ், கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் கோல்ப் விளையாட்டில் சம்பாதித்த பெரும்பாலான பணத்தை இழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன

அதுமட்டுமின்றி கருத்துவேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து டைகர் உட்ஸ் நேற்று புளோரிடா மாகாணத்தின் ஜூபிடர் நகரில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் ஓட்டி சென்ற கார் தாறுமாறாக ஓடியதால் காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது டைகர் உட்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியதை ஒப்புக்கொண்டார். இதனால் கைது செய்யப்பட்ட டைகர் உட்ஸ் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

Leave a Reply