shadow

trisha 500கடந்த வாரம் டெல்லி மிருகக்காட்சி சாலையில் வெள்ளைப்புலி ஒன்று போதையுடன் இருந்த இளைஞர் ஒருவரை  கடித்து குதறி கொன்ற வீடியோ காட்சியை பலர் இணையளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த புலியை கொல்ல பலர் மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகளை வற்புறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் அந்த புலியை கொல்ல இருப்பதாக வதந்தி பரவியது. ஆனால் இதற்கு விலங்குகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமைதியாக இருந்த புலிய சீண்டிவிட்டது போதை இளைஞர்தான் என்றும் அதனால்தான் அவர் மரணம் அடைந்தார் என்றும் கூறி புலியை கொல்லக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையா சமீபத்தில் நடிகை த்ரிஷா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு டுவிட்டர் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞரை புலி கொன்றதால் அந்த புலியை கொல்ல போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும், இதில் ஜனாதிபதி தலையிட்டு புலியின் உயிரை காப்பாற்றும்படியும் கோருக்கை விடுத்துள்ளார். நடிகை த்ரிஷா பல சமயங்களில் நாய் உள்பட பல்வேறு விலங்குகளின் நலனுக்காக குரல் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே.

மேலும் டெல்லியில் போதை இளைஞர் ஒருவரை கொலை செய்த விஜய் என்ற பெயருடைய விஜய்க்கு தற்போதைக்கு கொல்லும் எண்ணம் இல்லை என்றும், இந்த செய்தி வெறும் வதந்தி என்றும் மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply