shadow

‘துக்ளக்’ ஆசிரியர் சோ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
cho and jaya
துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியரும், பிரபல நகைச்சுவை நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி, கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது அவர் சரளமாக பேசுவதாகவும், அடுத்த ‘துக்ளக்’ இதழுக்கான கேள்வி பதிலை அவர் எழுத தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னதாக சோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிடோர் அவரை மருத்துவமனையில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply