வாலிபரை கற்பழித்த 3 பெண்கள். உயிரணுக்களுடன் தப்பித்ததாக பெரும் பரபரப்பு
இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் கற்பழிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் தனியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவரை மூன்று பெண்கள் மாறி மாறி கற்பழித்து வாலிபரின் உயிரணுக்களுடன் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள போர்ட் எலிசபெத் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கருப்புநிற பி.எம்.டபிள்யூ. கார் அவருடைய காரின் குறுக்கே நின்றது. மின்னல் வேகத்தில் காரில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள் வாலிபரிடம் வழி கேட்பதுபோல் நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை தூக்கி தங்களது காரினுள் போட்டுக்கொண்டு புறப்பட்டனர். போகும் வழியில் காரில் இருந்த வாலிபருக்கு மயக்க மருந்து கொடுத்து மூவரும் மாறி மாறி அந்த வாலிபருடன் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், வாலிபரின் விந்தணுவை ஒரு பிளாஸ்டிக் உறையில் சேகரித்து, ஐஸ் பெட்டிக்குள் பாதுகாத்து வாலிபரை சாலையில் போட்டுவிட்டு தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வாலிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தப்பிச்சென்ற மூன்று பெண்களை தேடி வருகின்றனர்.
Chennai Today News:Three women kidnap man, rape him and steal his semen in South Africa
Leave a Reply
You must be logged in to post a comment.