shadow

மூன்று மாநில ராஜ்யசபா தேர்தல் திடீர் ஒத்திவைப்பு. தேர்தல் ஆணையம் அதிரடி

மேற்கு வங்கம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களுக்கு  நடைபெறவிருந்த ராஜ்ய சபா தேர்தல், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மறு தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேற்கு வங்கம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 ராஜ்ய சபா எம்பி-க்களுக்கான பதவிக்காலம், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகின்றன. இதில், கோவா மாநிலத்திலுள்ள ஒரு மாநிலங்களவை எம்பி-யின் பதவிக்காலம் வரும் ஜூலை 28 ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. குஜராத் மாநிலத்தில், மூன்று மாநிலங்களவை எம்பி-க்கள், மேற்கு வங்கத்தில் ஆறு மாநிலங்களவை எம்பி-க்களின் பதவிக்காலம் ஆகஸ்டு 18-ம் தேதி அன்று நிறைவடைகின்றன.

எனவே, இந்த இடங்களுக்கான தேர்தலை ஜூன் 8-ம் தேதி நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆ

Leave a Reply