தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

லண்டனில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இவர்கள் மூவரும் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவர்கள் மூவரையும் சேர்த்தால் கொரோனா வைரசால் தமிழகத்தில் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply