ஆரண்ய காண்டம்’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி-பகத்பாசில்
சிறந்த புதுமுக இயக்குநர் மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகிய இரண்டு தேசிய விருதுகள் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்ற திரைப்படமான ‘ஆரண்ய காண்டம்’ என்ற படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தற்போது அடுத்த படத்தை தொடங்க ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இவர்கள் இருவருக்கும் ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிரடி ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் திரைக்கதை தயார் நிலையில் இருப்பதாகவும், வரும் நவம்பர் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தியாகராஜன் குமாரராஜா தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.