shadow

இந்த போராட்டம் காந்தியின் சத்யாகிரகத்திற்கு இணையானது. அனிருத்

ஜல்லிக்கட்டுக்காக அனைத்து திரையுலகினர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து சற்று முன்னர் கருத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியதாவது: “எல்லோருக்கும் வணக்கம். ஜல்லிக்கட்டு நமது அடையாளம்,. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி நடந்து வருவதை பார்க்கும்போது சத்யாகிரகம் ஞாபகம் வருகிறது. தமிழனாக பிறந்ததற்கு பெருமை அடைகிறேன். இந்த போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு’ என்று கூறியுள்ளார்.

அனிருத்தின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து நடத்தும் போராட்டத்திலேயே வன்முறை வெடித்து வரும் இந்த காலத்தில் லட்சக்கணக்கானோர் கூடியும் ஒரு சிறு வன்முறை கூட நடக்காததால், இதை சத்யாகிரகம் 2 என்றே சொல்லலாம் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply