சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நாளை சம்ப்ரோட்சணம் நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், 1938ம் ஆண்டுக்கு பின் 1975, 1992 மற்றும் 2004ம் ஆண்டுகளில் சம்ப்ரோட்சணம் நடந்தது. அதையடுத்து, கடந்த, ஜன., ௨௬ம் தேதி திருப்பணிகள் துவங்கி, ஐந்து கோடி ரூபாயில் நடந்து முடிந்தன. அதையடுத்து நாளை (12ம் தேதி) காலை 7:00 முதல் 8:00 மணிக்குள் பார்த்தசாரதி சுவாமி, ஆண்டாள், வேதவல்லித் தாயார், ரங்கநாதர், கோதண்டராமர், ராமானுஜர், மணவாளமாமுனிகள், ஆழ்வார் ஆச்சாரியார்களின் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோட்சணம் நடைபெற உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.