shadow

steps enthst clmb

திருப்பதி மலைப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என பொறியியல் துறை
அதிகாரிகளுக்கு, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் உத்தரவிட்டுள்ளார். அலிபிரி நடைபாதையில் பாதயாத்திரை வந்து முடிகாணிக்கை செலுத்திய
பின், இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், அலிபிரி நடைபாதையில் வரும் பக்தர்கள் கூட்டமும், வாகன போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், மலைப்பாதையை அதிகரிக்க வேண்டும் எனவும், அவ்வாச்சாரி கோணா பகுதியில் தடுப்புக்கம்பிகள் அமைக்கவும் பொறியியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply