shadow

LRG_20151013105707687726

திருப்பதி பிரம்மோற்சவத்திற்காக, பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம், 10 டன் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று 3.5 டன் பூக்கள் கொண்டு செல்லப்பட்டது. திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம், ஆண்டுதோறும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று முதற்கட்டமாக 3.5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சபா பொருளாளர் மருதசாமி கூறுகையில்,“13 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு பூக்களை அனுப்புகிறோம். இவ்வாண்டு இருமுறை பிரம்மோற்சவ விழா திருப்பதியில் நடக்கிறது. கடந்த செப்.,15ல் திண்டுக்கல்லிலிருந்து பூக்களை அனுப்பினோம்.

தற்போது இரண்டாவது பிரம்மோற்சவ விழா அக்.,12 முதல் அக்., 20 வரை நடக்கிறது. அதற்காக துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை
நேற்று முதல் பழநியிலிருந்து அனுப்புகிறோம். மொத்தம் 10 டன் வரை அனுப்ப உள்ளோம்,” என்றார்.

திருப்பதிக்கு பூக்களை அனுப்ப விரும்புவோர்:
94434 03026ல் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply