முதல்வர் உடல்நிலை குறித்து கருணாநிதிக்கு எதிரான கருத்தை கூறிய திருநாவுக்கரசர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சிலநாட்களாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, வதந்தி மேலும் பரவாமல் இருக்க சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நேற்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடுமாறு கோருவது சரியல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் பெண்ணாக இருப்பதால் அவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டியதில்லை. அவ்வாறு வெளியிடக்கோருவது சரியானதும் அல்ல. அவ்வளவு தூரம் ஆராய்ச்சிகள் தேவையில்லை.
அப்போலோ மருத்துவமனை சார்பில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க தலைமைச்செய லாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.