இரட்டை இலை கிடைத்தாலும் வெற்றி கிடைக்காது: திருநாவுக்கரசர்
இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தாலும் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் வகையில் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது நல்லது என்பது என்னுடைய சொந்த கருத்து
இந்த இடைத்தேர்தல் பல பேருக்கு பரிசோதனை தளமாக அமைந்துள்ளது. இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தாலும், இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்காது. பணப்பட்டுவாடா முறைகேடு நடைபெறாமல் இடைத்தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தேர்தல் ஆணையம் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.