தமிழக முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்
நடிகர்களால் அரசியலில் இனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்ற தமிழக முதல்வரின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்
நேற்று அவர் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோது ’பொதுமக்களுக்கு தற்போது அரசியல் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே எம்ஜிஆர் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை போல் இனி நடிகர்கள் ஏற்படுத்த முடியாது என்ற முதல்வரின் கருத்தை தான் ஆமோதிப்பதாகவும், நடிகர்களின் அரசியல் இனி எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்
எம்ஜிஆர் அவர்களுக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்களான சிவாஜி கணேசன் முதல் கமலஹாசன் வரை எந்த நடிகரும் இதுவரை அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.