நடிகர் கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து வரும் திருமாவளவன் நேற்று தான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு பங்கேற்குமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திருமாவளவன் இணைய பக்கத்தில் ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இதில் 40க்கும் அதிகமான கட்டுரைகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த புத்தகத்தின் பிரதியை சென்னை புத்தக கண்காட்சியில் கடந்த மாதம் வெளியிட்டார். அப்போது புத்தகத்தை வெளியிட்டு பேசிய திருமாவளவன், முறைப்படி அரசியல்வாதிகளை அழைத்து புத்தக வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது அந்த புத்தகத்தை திருமாவளவன் முக்கிய தலைவர்களை சந்தித்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த வரிசையில், அமைப்பாய் திரள்வோம் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் இந்த அழைப்பை ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.