1 மாதத்திற்கு முன்பே ‘தெறி’யின் முன்பதிவு ஆரம்பம்.
பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கு முன்னர் ஒரு வாரம் அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் முன் பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இளையதளபதி விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அதாவது இன்னும் ஒரு மாத காலம் இடைவெளி உள்ள நிலையில் நேற்று முதல் சென்னை எஸ்.பி.ஐ சினிமாஸ் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் அனைத்தும் ஒருசில வினாடிகளில் விற்று தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மட்டுமின்றி கோவை உள்பட எஸ்.பி.ஐ சினிமாஸ் திரையரங்குகள் உள்ள நகரங்களில் இந்த முன்பதிவு ஆரம்பமாகிவிட்டதாகவும், இளையதளபதி விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு அன்று சென்னை சத்யம் திரையரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.