shadow

சென்னையில் காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி: தேனி எஸ்பி விளக்கம்

சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு நேற்று தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை காவலா்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ரகு, கணேஷ் ஆகிய இரண்டு காவலர்கள், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுக்க நேற்று மாலை வந்தனர். மனுவை கொடுத்த பின்னர் வெளியே வந்த இருவரும் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்டதில் தீக்குளிக்க முயன்ற, இருவரும் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த போது, அவர்கள் மீது சாதி அடிப்டையில் மேலதிகாரிகள் நடந்து கொண்டதாகவும், பழி வாங்கும் நோக்கத்துடன் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் காவலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘சிறைக் கைதிகளிடம் கஞ்சா சிக்கியது தொடா்பாக சிறைகண்காளிப்பாளா் அளித்த புகாரின் அடிப்படையில் அ்ங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலா் ரகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவலா் கணேஷ் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு முறையாக செல்லாமல் சீருடையுடன் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். சில விஷயங்களில் காவல்துறையினருக்கு எதிராக அவா்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனா்.

இதுபோன்று பல ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவும், துறை உத்தரவை மதிக்காமல் இருந்த காரணத்தாலும், குறிப்பிட்ட இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் பரிந்துரை செய்துள்ளார்.

அதன் அடிப்படையில், அவா்கள் ராமநாதபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதனைத் தொடா்ந்து அவா்கள் என்னிடம் வந்து எங்களை நீங்கள் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று கூறினா். குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரகு, கணேஷ் உள்பட 4 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களில் மற்ற ஜாதியினரும் இருக்கும் நிலையில் அவா்களை ஜாதி ரீதியாக பிரிப்பதாக குற்றம் சாட்டுவது பொய்யானது.

காவல்துறையில் அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட ஜாதியினா் மீது மட்டும் கூறுவதை ஏற்க முடியாது. இவா்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்

Leave a Reply