நாகர்கோவில் காவல்நிலையத்தில் திருடனிடம் இருந்து கைப்பற்றிய ஒரு செல்போன், காவல்நிலையத்தில் மீண்டும் திருடு போனதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் சமீபத்தில் ஒரு செல்போன் திருடனை பிடித்து அவனிடம் இருந்து மிகவும் விலையுயர்ந்த ஒரு செல்போனை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் அந்த செல்போனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக ஏட்டு ஒருவர் தனது மேஜை டிராயரில் பத்திரமாக வைத்திருந்தார். ஆனால் திடீரென அந்த செல்போன் காணாமல் போனது.
உடனடியாக ரகசிய விசாரணையில் இறங்கிய போலீஸார் காவல்நிலையத்தில் ஏட்டு மேஜை டிராயரை திறந்து திருடியது அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ. என்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அந்த பெண் எஸ்.ஐ.யை போலீஸ் உயரதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக் வேறு இடத்திற்கு அவரை டிரான்ஸ்பர் செய்தனர்.
திருடர்களை பிடிக்க வேண்டிய காவலர்களே திருட்டில் ஈடுபட்டால் என்ன செய்வது? என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.[/dropcaps]
Leave a Reply
You must be logged in to post a comment.