shadow

தீயாய் பறந்த தீப்பொறி ஆறுமுகத்தின் இன்றைய நிலை இதுதான்

theeporiதீப்பொறி ஆறுமுகம் பேச்சு என்றாலே பெயருக்கு ஏற்றவாறு பொறி பறக்கும். அவரது பேச்சில் அனல் பறந்ததால் பெரிய தலைவர்களுக்கு வரும் கூட்டத்திற்கு இணையாக அவரது பேச்சை கேட்க தொண்டர்கள் குவிந்துவிடுவார்கள் ஆனால் இன்று அவர் வயிறு கால்கள் வீங்கி குளுக்கோஸ் ஏற்றி உயரை கையில் பிடித்து வருகிறார். தன்னுடைய இன்றைய நிலை குறித்து அவர் கூறியதாவது:

நான் எப்பவுமே இப்படி வந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கிடந்ததில்லை. என் வயிறு பெருசாகிட்டே வந்தது. இந்த வயசுல நமக்கு தொப்பை வைக்குதுன்னு ஜாலியா எடுத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு பயங்கரமான வலி வந்துருச்சு. மருத்துவமனைக்கு வந்து பார்த்தா எனக்கு கல்லீரலும் சரியில்லை… கிட்னியும் சரியில்லைனு டாக்டர் சொல்லிட்டாரு. எல்லா செக்கப்பும் பண்ணிட்டுத்தான் என்ன பிரச்னைனு உறுதியாச் சொல்ல முடியும்னு சொல்றாங்க. எனக்கு எதுவும் ஆகாதுன்ற நம்பிக்கை மட்டும் இருக்கு! என்று கூறுகிறார்.

மேலும் தனக்கு கட்சி செய்த உதவி குறித்து கூறியபோது, “தலைவர் ஸ்டாலின் மிகவும் பிஸியா இருக்காரு. அவரைச் சொல்லி குற்றம் இல்லை. அவருக்கு வேலை பளு அதிகமா இருக்கும். என்னாலையும் அவரைப் போய் பார்க்க முடியாதபடி கால்கள் நல்லா வீங்கி வலி எடுக்க ஆரம்பித்திருச்சு. இங்க உள்ள மாவட்ட நிர்வாகிகள் அப்பப்ப வந்து பாத்துகிறாங்க. 5 ஆயிரம் 10 ஆயிரம்னு எனக்கு செலவுக்குப் பணம் கொடுக்குறாங்க. திருச்சி சிவா 50 ஆயிரம் கொடுத்தாரு. தலைமையில இருந்து இன்னும் முடிவெடுக்கலை போல. தி.மு.க யாரையும் கைவிட்டதில்லை. கட்சி விரைவாக முடிவெடுத்து உதவி செய்வாங்கனு நினைக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரத்துக்கு மேல செலவாகிறது’’ என கட்சியை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும் அவரது குரலில் ஒரு விரக்தி தெரிகிறது.

Leave a Reply