ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்று நிகழ்ந்த முதல் மோசமான சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு மோசமான சாதனை நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு மோசமான சாதனை இதற்கு முன் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடிய போதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் 388 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வரும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டும் இந்திய கேப்டனை போலவே முதல் பந்தில் அவுட்டானார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரு அணி கேப்டன்களும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருப்பது இதுதான் முதல் முறை என்பது தான் அந்த மோசமான சாதனை ஆகும்

Leave a Reply