shadow

17M-Missing plane search MAP.jpgமலேசியாவின் விமானம் மர்மமாக மறைந்து 15 நாட்கள் ஆனபின்பும் இன்னும் விமானம் குறித்த உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் விமானத்தின் பைலட்டுகளுக்கும், தரையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடந்த கடைசி 54 நிமிட தொடர்புகள் குறித்த தகவல்கள் வியட்நாமின் விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியுள்ளதாக நேற்று தெரிய வந்துள்ளது.

மலேசியாவின் விமானம் MH370, கடந்த 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிலமணி நேரங்களில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விமானத்தின் இருந்து சில தகவல்கள் தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த தகவல்கள் மலேசியாவின் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லாமல், வியட்நாமின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

இதிலிருந்து விமானம் பாதைமாறி சென்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வியட்நாமின் விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவான பழைய தகவல்களை நேற்று சோதனை செய்தபோது தான் இது தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மலேசிய விமான கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு இந்த தகவல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் விமானிகள் என்ன தகவல்கள் சொல்ல முயற்சி செய்தனர் என்பதை கண்டுபிடிக்கப்படும்.

Leave a Reply