shadow

நரகாசுரன் கதையை கையில் எடுத்த நரேன்

அறிமுக இயக்குனர் கார்த்திகெ நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைத்து தரப்பினர்களின் பாராட்டை பெற்றது. இந்த படத்தின் வித்தியாசமான திரைக்கதையை பாராட்டாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த கார்த்திக் நரேன் தற்போது இரண்டாவது படத்திற்கு தயாராகிவிட்டார்.

கார்த்திக் நரேனின் இரண்டாவ்து படத்தின் டைட்டில் ‘நரகாசுரன்’ என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நரகாசுரன் இறந்த நாளை தீபாவளி பண்டிகையாக இந்தியர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த வித்தியாசமான டைட்டிலை தேர்வு செய்து கார்த்திக் நரேன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply