shadow

journalistநிலக்கரி சுரங்க ஊழல் குறித்து தொடர் கட்டுரை எழுந்தி வந்த மத்திய பிரதேச மாநில பத்திரிகையாளர் சந்தீப் கோத்தாரி என்பவர் கடத்தப்பட்டு எரித்து கொல்லப்பட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளரை கொலை செய்த மும்பையை சேர்ந்த மாபியா கும்பலை சேர்ந்த 3 பேர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் சந்தீப் கோத்தாரியை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே கொலை செய்து எரித்து விட்டதாகவும், நிலக்கரி ஊழலை குறித்து அவர் கட்டுரை எழுதி அம்பலப்படுத்தி வந்ததால், இந்த செயலை செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதுஜ்.

இவரோடு சேர்த்து சமீபத்தில் மட்டும் 3 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் உத்தரபிரதேசம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் பத்திரிகையாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டார்கள். கடந்த ஒரே மாதத்தில் 3 பத்திரிகையாளர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply