shadow
இவர்தான் தென்கொரியாவின் ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது தோழியால் பலவித சிக்கல்கள் வந்ததாக கூறப்படுவதோடு, அவரது மரணத்திற்கும் தோழிதான் காரணம் என்று பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா போலவே தென்கொரிய பெண் அதிபரும் பெருஞ்சிக்கலில் மாட்டியுள்ளார். ஆம், தற்போது அவரது பதவியே தோழியுடன் கொண்ட நட்பால் பறிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் முதல் அதிபர் என்ற பெருமை பெற்ற ஜியன் ஹை என்பவர் தனது தோழி சோய் சூன் சில் என்பவரை பர்சனல் மேனேஜராக நியமனம் செய்தார்.
அதிபரின் தோழி என்ற ஆணவத்தில் சோய் சூன் பலவிதமான முறைகேடுகள் செய்ததாக குற்றஞ்சாட்டியதால் நேற்று தென்கொரிய நாடாளுமன்றத்தில் அதிபரை பதவியில் இருந்து நீக்கம் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 234 உறுப்பினர்களும், 56 பேர் எதிர்த்தும் வாக்களித்ததால் அதிபர் பார்ஜ் ஜியன் ஹை பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது சொல்லுங்கள் இவர் தென்கொரியாவின் ஜெயலலிதா தானே…

Leave a Reply