தமிழகத்தின் இரண்டாவது கொரோனா நோயாளி குறித்த தகவல்கள்
தமிழகத்தில் ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் ஆக்கப்பட்டது
இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் அந்த நபர் 20 வயது இளைஞர் என்றும் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சலூன் கடையில் வேலை பார்த்தவர் என்றும் கடந்த 12ஆம் தேதி ரயிலில் அவர் சென்னை வந்ததாகவும் தெரிகிறது
அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என்றும் எந்த வெளிநாட்டினரின் தொடர்பும் இல்லை என்றும் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது, தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் குணமாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.