பாடகி கனிகாகபூர் பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் அதிர்ச்சி மெடிக்கல் ரிப்போர்ட்

பாலிவுட் பிரபல பாடகி கனிகாகபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய போது, கொரோனா குறித்த பரிசோதனை செய்யாமல் அதிலிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

முன்னதாக தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்தும் அவர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் அந்த பார்ட்டியில் மொத்தம் 56 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது இந்த நிலையில் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 56 பேர்கள் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் தற்போது 11 பேரின் முடிவுகள் வெளிவந்துள்ளது

இந்த பரிசோதனையின் முடிவின்படி அந்த 11 பேருக்கு கொரோனா ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ள 45 பேர்களின் ரிப்போர்ட் வந்தால் மட்டுமே அதில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றது என்பதை முடிவு செய்ய முடியும்.

Leave a Reply