இந்திய விமானப் படை பணியில் சேருவதற்கு இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படை ஆள் சேர்க்கும் மையத் தகவலின்படி, இந்திய விமானப் படைக்கு கல்வி பயிற்றுநர், மோட்டார் வாகன தொழில்நுட்ப வல்லுநர் பணியான ஏர்மென் பதவிகளுக்கு ஆள் சேர்க்கப்படவுள்ளது. திருமணமாகாத இந்திய குடிமக்களிடம் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தேர்வு செய்யும் பணி, செப். 20, 22-ம் தேதிகளில் தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடைபெறவுள்ளது. வயது மற்றும் தேர்வு முறை குறித்த விவரங்களை அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.