அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்று சமீபத்தில் குமுதம் வார இதழ் எடுத்த கருத்துக்கணிப்பு காரணமாக விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே பல நாட்களாக மோதல் நீடித்து வந்தது என அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் ஒருவழியாக அந்த பிரச்சனை முடிந்து இருதரப்பு ரசிகர்களும் அமைதியான நிலையில், தற்போது இந்த பிரச்சனையை மீண்டும் சரத்குமார் பற்ற வைத்துள்ளார்.
விஜய் டிவியின் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து கூறும்போது, ‘சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை அனைவரும் இங்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும், உண்மையான சூப்பர் ஸ்டார் என்பது ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவு மக்கள் மனதில் இருக்க வேண்டும் என்றும் அவரே சூப்பர் ஸ்டாருக்கு தகுதியானவர் என்றும் கூறினார்.
அந்த வகையில் பார்த்தால் சினிமா உலகை பொருத்தவரை எம்.ஜி.ஆர் ஒருவர்தான் தனக்கு தெரிந்து ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் அரசியலில் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் மறைமுகமாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் இல்லை என்று சரத்குமார் கூறியுள்ளதாக நினைத்து சமுக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர்கள் சரத்குமாருக்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.