பெஷாவர் நடந்த ராணுவப் பள்ளித் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் குழந்தைகளை கடத்தி கொலை செய்யப்போவதாக தலிபான் தீவிரவாதிகள் மிரட்டி உள்ளனர் என்று செய்தி பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக தலிபான்கள் எழுதிய மிரட்டல் கடிதம் ஒன்று பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இன்று காலை வந்துள்ளது. தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாதிகளின் அமைப்பின் கமாண்டர் முகம்மது ஹராசனி எழுதியதாக கூறப்படும் இந்த மிரட்டல் கடிதத்தில், ” கைதுச் செய்து வைத்துள்ள தங்கள் அமைப்பினர்களை பாகிஸ்தான் அரசு உடனடியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களின் குழந்தைகளை கடத்தி கொல்வோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதத்தை அடுத்து பாகிஸ்தானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.