எச்.ராஜா டுவீட்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கைது தயாநிதி மாறன் என எச்.ராஜா தனது டுவிட்டரில் டுவீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த பிப்.15 ஆம் தேதி சென்னையில் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக வந்த புகார்களின் அடிப்படையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தயாநிதி மாறன் எம்பி பேசியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?

Leave a Reply