அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய, இந்திய அதிகாரி தேவ்யானி கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டிற்கான புதிய தூதுவராக எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வாஷிங்டன் செல்லும் அவர், விரைவில் புதிய தூதுவராக பொறுப்பேற்க உள்ளார்.இவர் சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியவர் ஆவார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, விடுமுறையில் ஹவாய் தீவுகளுக்கு சென்றுள்ளதால், அவரின் வருகைக்குப் பின், ஜெய்சங்கர் முறைப்படி பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply