கொரோனாவுக்கு பலியான முதல் காவல்துறை அதிகாரி!
இந்தியாவில் கொரோனாவால் 450க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவால் முதல்முறையாக ஒரு காவல்துறை அதிகாரி பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இவர்தான் கொரோனாவுக்கு பலியான இந்தியாவில் முதல் காவல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது
அனில் கோலி அவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.