shadow

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார். திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

muthu-kumarபிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமார் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலையுடன் கூடிய காய்ச்சல் காரணமாக அவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. முத்துகுமாரின் மறைவிற்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. 

முத்துகுமாரின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்

ஜி.வி.பிரகாஷ்:

ரோபோ சங்கர்: தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சி. அவருடன் பழகிய ஒருசில நாட்களை என்னால் மறக்கவே முடியாது

மடோனா செபாஸ்டியன்: தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துகுமார் மறைவை நம்பவே முடியவில்லை. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கீர்த்திசுரேஷ்: உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுடைய பழைய நினைவுகளை கண்முன் நிறுத்தின

அட்லி: முத்துகுமார் அண்ணா நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோம்

ஆர்யா: முத்துகுமார் மறைவை நம்பவே முடியவில்லை. கடவுள் அவருடைய குடும்பத்திற்கு தைரியத்தை கொடுக்கட்டும்,

ஹாரீச் ஜெயராஜ்: நா.முத்துகுமார் மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்தாலும் அவருடைய பாடல் வரிகள் மறையாது.

டி.இமான்: அவருடன் இணைந்து பல படங்களில் பணிபுரிந்துள்ளேன். திரையுலகம் மீண்டும் ஒரு நல்ல கலைஞரை இழந்துள்ளது.

Leave a Reply