shadow

புதியதமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பெயரில் மிரட்டல் வருகிறது. திவ்யபாரதி

கக்கூஸ் ஆவணப்பட இயக்குனரும் சமூக போராளியுமான திவ்யபாரதி சமீபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: எனது தொலைபேசி எண்ணை வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டு , இந்த நம்பருக்கு யார் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு , எதற்கு வேண்டுமானாலும் அழைக்கலாம் என்ற குறுஞ்செய்தி தொடர்ந்து பரவி வருகிறது. ஒரு நாளுக்கு 1000 மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகிறது.

என்னை அழைப்பவர்களில் பலர் நான் பாஜகவை சேர்ந்தவர் என்றே கூறுகின்றனர். மேலும் அவர்கள் தகாத வார்தையை பயன்படுத்துகிறார்கள் . பல சாதி இயக்கங்களின் பெயர்களை சொல்லியும் மிரட்டல் அழைப்பு வருகிறது. மேலும் புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் பெயரிலும் மிரட்டல் வருகிறது.

நான் செல்லும் இடங்களுக்கு அவர்கள் என்னை தொடர்ந்து வருவதும், அப்போது எனது தொலைபேசியில் அழைத்து இங்கே ஏன் வந்தாய் என்று மிரட்டுவதும் அடிக்கடி நடக்கிறது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைமுக்கு புகார் அளித்திருந்தேன் . அதற்கான நடவடிக்கையை அவர்கள் எடுத்திருக்கின்றனர் ” இவ்வாறு திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply