சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வெற்றியோடு ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன் லிங்கா படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது நினைவிருக்கல்லாம். இந்த வழக்கில் பதிலளித்த கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்தின் கதை பொன்ராம் என்பவருடையது என்றும், திரைக்கதை வசனம் எழுதி தான் இயக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லிங்காவில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சி ஒன்று ஆங்கில படத்தில் இருந்து திருடியது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ரூ.3 கோடி மதிப்புள்ள வைரை நெக்லஸை ரஜினிகாந்த் திருடும்போது ஒரு சிறிய அறைக்குள் ரஜினியும் அனுஷ்காவும் மாட்டிக்கொண்டு அங்கிருந்துகொண்டே சாவியை எடுத்து நெக்லஸை திருடுவார். இந்த காட்சி சிறிதுகூட மாறாமல் அப்படியே ஆங்கிலப்படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது. அதற்கு இதோ கீழே உள்ள வீடியோதான் சாட்சி.
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பத்து நிமிட காட்சியை வெட்டித்தள்ளிய கே.எஸ்.ரவிகுமார் இந்த காட்சியையும் வெட்டிவிட்டால் நல்லது. அல்லது எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாகும் என்று பரவலாக கூறப்படுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1xqR89y” standard=”//www.youtube.com/v/MBJXPboqTl4?fs=1″ vars=”ytid=MBJXPboqTl4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3719″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.