தந்தி டிவி ஹரிஹரன் திடீர் விலகல். அர்னாப் கோஸ்வாமியுடன் இணைந்தார்
தமிழ் செய்தி சேனல்களில் ஒன்றான தந்திடிவி, கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அந்த சேனலின் முன்னணி செய்தியாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹரிஹரன் விலகியுள்ளார்.
டைம்ஸ் இந்தியா புகழ் அர்னாப் கோஸ்வாமி விரைவில் ஆரம்பிக்கவுள்ள ‘ரிபப்ளிக்’ என்ற ஆங்கில சேனலில் ஹரிஹரன் இணைந்துள்ளதாகவும், இனி அவரது சூடான அரசியல் விவாதம் நாடு தழுவிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தலைமைச்செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே மற்றும் ஹரிஹரனுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஹரிஹரனின் விலகல் அந்த சந்தேகத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.