அதிமுகவில் பிளவு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. தம்பிதுரை
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது என்று நாங்கள் எடுத்த முடிவையே ஓபிஎஸ் அணியினரும் எடுத்துள்ளதில் இருந்தே எங்களுக்குள் கருத்துவேறுபாடு இல்லை என்பதும் அதிமுகவில் பிளவு இல்லை என்பதும் தெரியவருகிறது என்று மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்
மேலும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்களை அதிமுக அம்மா அணி ஆதரிப்பது என்பது முதல்வர் பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் தம்பிதுரை மேலும் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கனவு நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.