shadow

thamarai பிரபல திரைப்பட பாடலாசிரியை தாமரை, தன்னுடைய கணவர் திடீரென தன்னைவிட்டு சென்றுவிட்டதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கடந்த 27ஆம் தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டம் கடந்த ஒருவார காலமாக சென்னையின் பல பகுதிகளில் அவர்நடத்தி வந்தார்.

thamarai 1இந்நிலையில் நேற்று இரவு அவருடைய கணவர் தியாகும், தாமரையின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததை அடுத்து தாமரை தற்காலிகமாக தனது தர்ணா போராட்டத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவிஞர் தாமரை செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இது ஒரு முழுமையான தீர்வு கிடையாது. நேரில் வந்தவர் கடிதம் மூலம் மன்னிப்பு கூறி உள்ளார். இது ஒரு அரசியல் நிகழ்வு போலவே உள்ளது. எங்கள் வீடும் போர்க்களம் போலவும், அரசியலாகவும் தான் இருந்தது.

நீதிமன்ற தீர்வுக்கு நான் ஒருபோதும் போவதில்லை. விவாகரத்து எளிதான தீர்வு. அதை நான் ஏற்கவில்லை. அவரை அசிங்கப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ தர்ணா போராட்டத்தில் நான் ஈடுபடவில்லை. இதுவரை நான் அவரை பற்றி எதுவும் கூறவில்லை. இனி, விசாரணை குழுவினர் விசாரித்து, பிரச்னைக்கு தீர்வு காணட்டும். அதில், உண்மையிலேயே என் மீது தவறு உள்ளதா? அவர் மீது தவறு உள்ளதா? என்பதை கண்ட பிறகுதான் முழுமையான முடிவு எடுப்பேன்” என்றார்.

Leave a Reply