shadow

பேய்க்கு பயந்து பெண்கள் உடையணியும் ஆண்கள்: தாய்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்

தாய்லாந்து நாட்டு மக்களிடம் பேய் குறித்த பயம் அதிகரித்து இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள ஆண்கள் பேய்க்கு பயந்து இரவில் பெண்கள் உடையணிவதாக வினோதமான செய்திகள் வெளிவந்துள்ளது.

பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழிக்கேற்ப தாய்லாந்து ஆண்கள் சூட்சுமமாக பேய்களை கையாளுவதாகவும், இங்குள்ள சில கிராமங்களில் ஆண்களுக்கு பேய் பயம் ஏற்படும் போது, வீட்டில் பெண்கள் உடை அணிந்து கொண்டு மன தைரியத்தை வரவழைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வீட்டின் கதவுகளில் இந்த வீட்டில் ஆண்கள் இல்லை என்று பெயர்ப்பலகையும் வைக்கத் துவங்கியுள்ளனர். வீட்டுக்கு வரும் பேய் இந்த பலகையை படித்துவிட்டு திரும்பி சென்று விடும் என்பது தாய்லாந்து நாட்டின் ஆண்களின் ஐதீகமாக உள்ளதாம்

Thailand village males wear women dress for afraid of ghost

Leave a Reply