கத்தி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘புலி’படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் புலி படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. கொச்சி விமான நிலையம் அருகேயுள்ள மஹாகனி தோட்டம் என்ற காட்டுப்பகுதியில் பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும், இந்த பிரமாண்ட செட்டில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சண்டைக்காட்சிக்கு பயிற்சி கொடுக்க தாய்லாந்து நாட்டை சேர்ந்த யங் ( YONG) என்ற ஸ்டண்ட் இயக்குனர் கேரளா வந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, தம்பி ராமையா, விஜயகுமார், உள்பட பலர் நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.