தாணுவின் அடுத்த படத்தில் அஜித்-ஷங்கர்?
இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்றால் அவர் கலைப்புலி எஸ்.தாணு என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் அவர் தயாரித்த மற்றொரு திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனை செய்துள்ளது. இந்நிலையில் விஜய், அஜித்தை அடுத்து அஜித் படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்க ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஏ.ஆர்.முருகதாசும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இருவரில் யார் இயக்கினாலும் அந்த படத்தை தயாரிக்க தான் தயாராக இருப்பதாக தாணு தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்-ஷங்கர் இணையும் படமென்றால் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்பதால் தற்போதைய சூழ்நிலையில் லைகா அல்லது தாணு மட்டுமே தயாரிக்க முடியும். எனவே கலைப்புலி தாணு, அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பார் என்று கோலிவுட் திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அஜித், ஐஸ்வர்யாராய், மம்முட்டி நடித்த, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற படத்தை தாணு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.